இந்தியா
முழு போதையில் விமானம் ஓட்ட வந்த விமானி.. ஏர் இந்தியா பயணிகள் திக்திக்!
![5 (14) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/5-14.jpg)
டெல்லி: ஏர்இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர், முழு போதையில் விமானத்தை ஓட்ட முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லண்டனில் இருந்து அந்த ஏர்இந்தியா ஏஐ-111 விமானம் டெல்லி நோக்கி கிளப்பி இருக்கிறது. விமானத்தின் துணை விமானி ஏற்கனவே வந்து விமானிக்காக காத்திருந்துள்ளார்.
300 பயணிகள் அந்த விமானத்தில் இருந்துள்ளனர். அதன்பின் விமானி ஏ கே கத்பலையா தாமதமாக அந்த விமானத்திற்குள் வந்துள்ளார்.
இதையடுத்து எப்போதும் விமானம் எடுப்பதற்கு முன் செய்யப்படுவதை போல இருவருக்கும் ஆல்கஹால் சோதனை செய்து இருக்கிறார்கள். இதில் விமானி ஏ கே கத்பலையா முழு போதையில் இருப்பது தெரிய வந்தது. இரண்டாவது முறை சோதனை செய்து அவர் போதையில் இருப்பதை உறுதி செய்தனர்.
இதனால் உடனடியாக அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்தனர். இதையடுத்து அவர் விமானம் ஓட்ட தடைவிதிக்கப்பட்டது. 3 வருடம் பயணிகள் விமானம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.