தமிழ்நாடு
ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் ரூ.2.63 லட்சம் கடன்: வெள்ளை அறிக்கையில் திடுக் தகவல்!
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் சற்று முன் கடந்த 10 ஆண்டுகளுக்கான நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த வெள்ளை அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கப்பட்ட மூன்று லட்சம் கோடி கடனில் 50 சதவீதம் வருவாய் பற்றாக்குறைக்கு செலவு செய்யப்பட்டது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது
பொருளாதார சரிவுக்கு கொரோனா வைரஸ் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும் உலகத்தில் கொரோனா அறிமுகமாகும் முன்னரே தமிழகத்தில் பொருளாதார சரிவு ஏற்பட்டு விட்டது
மத்திய அரசின் வரி பங்கீட்டில் தமிழகத்தின் பங்கு முழுமையாக வந்து சேரவில்லை.
2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் வருமானம் உபரியாக இருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,926 கடன்சுமை உள்ளது
தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்துள்ளதால் வட்டி அதிகரித்துக் கொண்டே வருகிறது
அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் தொகை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறையை ஒன்றரை லட்சம் கோடியாக இருந்ததால் நிதிப்பற்றாக்குறை அதைவிட பல மடங்கு உயர்ந்து விட்டது
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் நாலில் ஒரு பங்கு குறைந்து விட்டது
2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆகும்.. அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது
கடைசி ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த கடன் என்ற கேள்வி உள்ளது
தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி பீகார், உத்தரப்பிரதேசத்தை விட மோசமாக உள்ளது. தமிழகத்தை ஒப்பிடுகையில் பீகார் மின்வாரியத்தின் நிலைமை நன்றாக உள்ளது
தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது!
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடி; 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ. 2.28 லட்சம் கோடி
இவ்வாறு வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.