Connect with us

இந்தியா

இந்தியாவில் இனி டிக்டாக் இல்லை.. ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் பணிநீக்கம்..!

Published

on

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் டிக் டாக் செயலியை கொண்டு வர சீன நிறுவனம் பெரும் முயற்சி செய்தது. ஆனால் இனி இந்தியாவில் தங்களது நிறுவனம் செயல்பட முடியாது என்பதை தெரிந்து கொண்ட டிக் டாக் நிர்வாகம் இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது என்பதும் இதனால் ஒரு பகுதி ஊழியர்களை பணி நீக்கம் செய்த டிக் டாக் நிர்வாகம் மீண்டும் இந்தியாவில் டிக் டாக் செயலியை கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் மீதி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தது.

இந்த நிலையில் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இந்திய அரசு டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க மறுத்துவிட்டது என்பதால் இனி இந்தியாவில் டிக் டாக் செயலி செயல்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள டிக் டாக் ஊழியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் 40 பேர் வேலை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 9 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் டிக் டாக் அறிவித்துள்ளது.

டிக் டாக் நிறுவனத்தில் வேலை பார்த்த இந்திய ஊழியர்களுக்கு பிப்ரவரி 28 தான் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் காரணமாக வேறு வழி இன்றி இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோம் என்றும் இனிமேல் இந்தியாவில் டிக் டாக் செயலியை தொடங்கப் போவதில்லை என்றும் டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. டிக் டாக் தடை செய்யப்பட்டதால் இந்தியாவைச் சேர்ந்த வேறு சில செயலிகள் மிகப்பெரிய அளவில் பயன்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிராத டேட்டாவை பயன்படுத்துவதாக தடை செய்யப்பட்ட டிக் டாக் அதன்பிறகு பல்வேறு முயற்சிகள் செய்தும் இந்திய அரசாங்கம் அந்த செயலியை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட டிக் டாக் இந்தியாவில் இருநூறு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருந்தது என்றும் நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டு சந்தையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டிக் டாக் வெளியேற்றத்தால் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்