சினிமா
2.0 படத்தின் புல்லினங்காள் பாடல் ரிலீஸ்!
ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் 3வது பாடலான புல்லினங்காள் பாடல் வெளியாகியுள்ளது.
மறைந்த கவிஞர் நா. முத்துகுமார் வரிகளில் உருவாகியுள்ள புல்லினங்காள் பாடல் இப்படத்தி பிளாஷ்பேக் பாடலாக வரும் வாய்ப்பை பெற்றுள்ளது. புல்லினம் என்றால் பறவையை குறிக்கும் தூய தமிழ்ச்சொல். அக்ஷய் குமார் பறவை விரும்பியாக இருக்கும் இடத்தில் இந்த பாடல் இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில், ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இம்மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
இந்த பாடலில் அக்ஷய் குமாரின் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறலாம் என கருதப்படுகிறது. விரைவில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு இப்பாடல் விருந்தளித்துள்ளது.