உலகம்
1955 மாடல் மெர்சிடஸ் பென்ஸ் கார் ரூ.1100 கோடிக்கு விற்பனை!
1955ஆம் ஆண்டு மாடல் மெர்சிடஸ் பென்ஸ் கார் 1100 கோடி ரூபாய்க்கு ஏலம் ஆகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1955 -ஆம் ஆண்டு வெளியான மெர்சிடஸ் பென்ஸ் கார் சமீபத்தில் ஜெர்மனியில் ஏலம் விடப்பட்டது. மே 5ஆம் தேதி நடந்த இந்த ஏலத்தில் இந்திய மதிப்பில் 1,100 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தகவலை மெர்சிடஸ் பென்ஸ் சேர்மன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு $48.4 மில்லியன் டாலருக்கு பெர்ராரி கார் அதிக விலைக்கு ஏலம் போன நிலையில் அந்த சாதனையை மெர்சிடஸ் பென்ஸ் கார் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரை ஏலம் எடுத்தவரின் பெயரை தெரிவிக்க ஏல நிறுவனம் மறுத்துவிட்டது என்றாலும், இந்த காரை 1100 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்ததை தான் பெருமையாக கருதுவதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.