கிரிக்கெட்

2012ல் கொடுத்த அதே 192 டார்கெட்: இந்த முறை வெற்றி மாறுமா?

Published

on

கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 192 ரன்கள் எடுத்தன. அதே 192 ரன்கள் தான் இன்று சென்னை அணி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் கொல்கத்தா அணி டாஸ் வென்றதை அடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது

இன்றைய போட்டியில் சென்னை அணியின் டூபிளஸ்சிஸ் மிக அபாரமாக விளையாடினார் என்பதும் அவர் 86 ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் 32 ரன்கள் மொஇயின் அலி 37 ரன்கள் அடித்ததை அடுத்து சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளது

193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ஆம் ஆண்டு 192 என்ற இலக்கை கடைசி ஓவரில் எடுத்து வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, இந்த முறையும் அதே போல் வெற்றி பெறுமா அல்லது இந்த முறை வெற்றி மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version