இந்தியா

கேரளாவில் மேலும் 19 பேர்களுக்கு ஒமிக்ரான்: இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நேற்று ஒரே நாளில் 19 பேர்களுக்கு 2006 ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் தீவிரமாகவும் ஒமிக்ரான் வைரஸை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் எர்ணாகுளத்தில் மட்டும் 11 பேர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளதாகவும், தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆறு பேருக்கு ஒமிக்ரான் தொற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருச்சூர் கண்ணூர் பகுதிகள் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19 பேருக்கும் ஒமிக்ரான் பரவி உள்ளதை அடுத்து கேரளாவில் மொத்த ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கேரளாவில் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக குறிப்பாக இன்னும் ஒரு சில நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version