தமிழ்நாடு
சென்னை ஐஐடியில் மிக வேகமாக பரவும் கொரோனா: மொத்தம் 171 பேர் பாதிப்பு என தகவல்
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடியில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது சென்னை ஐஐடி வளாகத்தில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 என தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் .
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னை ஐஐடி வளாகத்தில் 26 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து ஐஐடி வளாகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஒன்று என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை ஐஐடியில் வளாகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.