இந்தியா
பாஜக எம்எல்ஏ மீது 17 வயது இளம்பெண் பாலியல் புகார்: அடுத்தடுத்து உயிரிழக்கும் கும்பத்தினர்!
![BJP MLA Rape Case - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/BJP-MLA-Rape-Case.jpg)
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது கடந்த ஆண்டு உன்னோவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார்.
பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கரின் வீட்டுக்கு வேலை குறித்து கேட்க கடந்த 2017-ஆம் ஆண்டு சென்றுள்ளார் 17 வயதான அந்த இளம்பெண். அப்போது எம்எல்ஏ அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனாலும் புகாரில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் பாதிக்கப்பட்ட பெண் முதல்வர் யோகியின் வீட்டின் முன் தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து விவகாரம் சூடுபிடித்தது. அந்த எம்எல்ஏ அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் இளம்பெண்ணின் தந்தை காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தார். இதற்கு சாட்சியாக இருந்த நபரும் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்நிலையில் அந்த பெண் தனது தாய் மற்றும் அத்தையுடன் வசித்து வந்தார்.
ஆனால் நேற்று தனது தாய், அத்தை மற்றும் வழக்கறிஞருடன் அந்த பெண் காரில் சென்றுகொண்டிருந்த போது லாரி ஒன்று மோதியுள்ளது. அதில் அந்த பெண்ணின் தாய் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளனர். வழக்கறிஞரும், அந்த பெண்ணும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வலுத்து வருகிறது.