தமிழ்நாடு

17 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி சீரழித்த திருமணமான 38 வயது ஆண்!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள 38 வயதான தமிழரசன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர். 17 வயதான அந்த மாணவி கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தாயுடன் பொங்கல் பண்டிகைக்காக பொருட்கள் மற்றும் புத்தாடை வாங்க சில தினங்களுக்கு முன்னர் பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது பேருந்தில் வைத்தே மாணவிக்கு வலிப்பு வர அவரை அருகில் இருந்தவர்களின் துணையுடம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் அவரது தாய். இதனையடுத்து மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறியுள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாணவியை அனுப்பினர்.

அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாணவியின் தாய் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்து தமிழரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது தமிழரசனுக்கு. 38 வயதான தமிழரசன் மீது போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version