தமிழ்நாடு

பெற்றோரை இழந்த சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய கொத்தனார்!

Published

on

தூத்துக்குடியில் 17 வயதான சிறுமியை 21 வயதான சிவலிங்கம் என்ற கொத்தனார் மிரட்டி கற்பழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்பமடைந்ததையடுத்து அந்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய், தந்தையை இழந்த 17 வயது சிறுமி தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்த அந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியை அவரது பாட்டி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி சிறுமியிடம் நடந்தவற்றை விசாரித்துள்ளார். அப்போது முத்தையாபுரத்தை சேர்ந்த 21 வயதான சிவலிங்கம் என்ற கொத்தனார் தன்னை மிரட்டி கற்பழித்ததாகவும், வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்தார்.

இதனையடுத்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து அந்த கொத்தனார் சிவலிங்கத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version