தமிழ்நாடு

தமிழகத்தில் இந்த ஆண்டு 1650 கூடுதல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை: அமைச்சர் தகவல்

Published

on

தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 1650 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று சட்டசபையில் விவாதத்தின்போது அதிமுக எம்பி ராஜன் செல்லப்பா அவர்கள் எழுப்பிய கேள்வியில் ’அதிமுக ஆட்சிகாலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கபட்டதாகவும் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை மா சுப்பிரமணியன் அவர்கள் ’11 கல்லூரிகளில் நடைபெறும் பணிகள் தற்போது பார்வையிடப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு கல்லூரியிலும் 150 மாணவர் சேர்க்கை என்ற விதத்தில் 1650 மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். மத்திய அரசு அனுமதி அனுமதி தந்து விட்டால் இந்த ஆண்டே ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என 11 மருத்துவக் கல்லூரிகளில் 1650 புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளததை அடுத்து அதிக மாணவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கேற்ற வகையில் கூடுதல் மாணவர்களை கலைக்கல்லூரிகள் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 25 சதவீத இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் இதனால் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகள் அனைத்திலும் இந்த ஆண்டு 25 சதவீத இடங்கள் அதிகமாக சேர்க்கப்படும் என்றும் அதேபோல் மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் 1650 புதிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version