தமிழ்நாடு

16 வயது மாணவி 5 பேரால் பலாத்காரம்: பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம்!

Published

on

சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம் பெண்களை பாலியல் வேட்டை நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதற்குள் பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேரை கைது செய்துள்ள சம்பவமும் அறங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தந்தை மட்டுமே உண்டு, தனது பாட்டி வீட்டில் வசித்து வரும் அந்த மாணவிக்கு குமரன் நகரை சேர்ந்த அமானுல்லா என்ற நண்பர் ஒருவன் இருந்துள்ளான். இந்நிலையில் அந்த மாணவி தனது நண்பன் அமானுல்லாவை பார்க்க அவனது வீட்டிற்கு நேற்று முன்தினம் அதாவது ஜூலை 4-ஆம் தேதி சென்றுள்ளார்.

ஆனால் தன்னை பார்க்க வந்த மாணவியை அமானுல்லாவும் அவனது நன்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த ஐந்து பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version