தமிழ்நாடு

மீண்டும் 16 தமிழக மீனவர்கள் கைது: 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை!

Published

on

கடந்த சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த 65 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் அது மட்டுமன்றி அவர்களது 100க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விட திட்டமிட்டு நேற்று முதல் ஏலத்தையும் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் சார்பில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இன்று மீண்டும் 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமன்றி மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்பதும் இந்த படகுகளும் ஏலம் விட வாய்ப்பு கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 16 மீனவர்களை உடனே விடுவிக்கவும், அவர்களுடைய படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version