விளையாட்டு

கிராண்ட் செஸ் மாஸ்டரை வீழ்த்திய தமிழகத்தின் 15 வயது சிறுவன்..!

Published

on

ரஷ்யாவில் நடைபெற்ற உலக செஸ் கோப்பை போட்டியில் செஸ் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பிரக்னானந்தா வெற்றிப் பெற்றுள்ளார்.

ரஷ்யாவில் எஃப்ஐடிஇ செஸ் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாம் சுற்றில் அர்மீனியா நாட்டைச் சேர்ந்த 37 வயதான செஸ் க்ராண்ட் மாஸ்டர் கேப்ரியல் என்பவரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளான் தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவந் பிரக்னானந்தா.

சர்வதேச அளவில் க்ராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர்களுள் 5-வது இளம் சிறுவன் என்ற பெருமையும் பிரக்னானந்தாவுக்கு உள்ளது. 7 வயதிலேயே செஸ் பட்டம் வென்றுள்ளார். இதேபோல் இந்தியாவைச் சேர்ந்த மேலும் சில செஸ் வீரர்களும் பல்வேறு சுற்றுகளில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version