கிரிக்கெட்

விராத் கோஹ்லி அபார ஆட்டம்: இங்கிலாந்தின் இலக்கு என்ன?

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் சரியாக விளையாடாத கேஎல் ராகுல் இன்றைய போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரோகித் சர்மா 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 25 ரன்கள் அடித்த நிலையில் ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி இன்றைய 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version