கிரிக்கெட்
இந்தியாவுக்கு நியூசிலாந்து கொடுத்த இலக்கு இவ்வளவுதான்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி 154 ரன்கள் என்ற இலக்கை கொடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான குப்தில் மற்றும் சாப்மேன் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பியதை அடுத்து நியூஸிலாந்தின் ரன்கள் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்துவீசினார் என்றதும் அனைத்து பந்துவீச்சாளர்களும் இன்று விக்கெட் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், அக்ஷர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த எளிய இலக்கை இந்தியா எட்டி விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.