கிரிக்கெட்

உலகக்கோப்பை டி20: பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த இலக்கு!

Published

on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது 151 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையா டிவரும் இன்றைய உலகக் கோப்பை டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி விட, விராத் கோலி களமிறங்கி பொறுப்புடன் விளையாடினார். அவர் 57 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதன்பின் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 39 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்த ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொதப்பி விடவே இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் அசன் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். இந்த நிலையில் 152 என்ற இலக்கை நோக்கி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
seithichurul

Trending

Exit mobile version