உலகம்
ஆண்குறியை அளக்க முயன்ற 15 வயது சிறுவன்: அதன்பின் ஏற்பட்ட விபரீதம்!
தனது ஆண்குறி எவ்வளவு நீளம் என அளக்க விரும்பிய 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தனது ஆண்குறியின் நீளம் எவ்வளவு என்பதை அளக்க விரும்பியுள்ளார். இதனை அடுத்து தனது அறையில் இருந்த யூஎஸ்பி கேபிளை அந்தரங்க பகுதியில் உள்ளே செலுத்த முயன்றபோது திடீரென அந்த கேபிள் உள்ளே சிக்கிக் கொண்டது. அதனை வெளியே எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுமட்டுமின்றி அந்தரங்க பகுதியில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் தனது தாயாரிடம் இது குறித்து கூறியுள்ளார்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவனை அழைத்து செய்யப்பட்ட நிலையில் அந்த சிறுவன் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை மருத்துவர் முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் லண்டன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லண்டன் மருத்துவர்கள் அந்த சிறுவனை சோதனை செய்தபோது சிறுவனிடம் சில விஷயங்களை கேட்டபோது அந்த சிறுவன் சொல்ல தயங்கினார்.
இதனை அடுத்து தாயை வெளியே அனுப்பிவிட்டு மருத்துவர் அந்த சிறுவனிடம் கேட்டபோது தனது அந்தரங்க பகுதி எவ்வளவு பெரியது என அறிய விரும்பி இவ்வாறு செய்ததாகவும் கூறினார். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு மனதளவில் தைரியம் கொடுத்த மருத்துவர் அதன் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சில மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் உள்ளே சிக்கியிருந்த கேபிள் வெளியே எடுக்கப்பட்டது. இதனை அடுத்த ஒரு சில நாட்களில் அந்த சிறுவன் டிஸ்சார்ஜ் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.
பாலியல் இன்பம் காரணமாக தனது அந்தரங்க பகுதி எவ்வளவு நீளம் என்பதை அறிய விரும்பிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்த தகவல் பிரிட்டன் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.