Connect with us

தமிழ்நாடு

தேர்தலில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா: 15 கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் தீர்மானங்கள்!

Published

on

தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் நடைபெறக்கூடிய மிதமிஞ்சிய பணப்பட்டுவாடாக்களை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையங்களை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள், தலைமையில் இன்று (17.03.2022) வியாழன் கிழமை சென்னை – குவாலிட்டி இன் (சபரி) ஹோட்டலில் நடைபெற்றtஹு.

இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சமாஜ்வாடி கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தேசிய மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் , இந்து மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை, தமிழ் தன்னுரிமை இயக்கம் ஆகிய 15 கட்சிகள் கலந்து கொண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஜனநாயகம் என்பது ஒவ்வொரு தனி மனிதருடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையோடு சுருங்கி விடுவதில்லை. அது தங்களுக்கான ஒரு அரசை தாங்களே சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியதே. எவ்விதமான வெளித்தூண்டுதல்களுக்கும் ஆளாகாமல் வாக்குரிமை பெறப்பட்ட அனைவரும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதே உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து தேசங்களிலும் கடைப்பிடிக்கக் கூடிய நடைமுறையாகும்.

எங்கிருந்தோ வந்தவர்கள் நம்மை அடக்கி ஆண்ட நிலைகளை மாற்றி, நம்மை நாமே ஆண்டுகொள்வதற்காக, ஏறக்குறைய 200 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தியே அந்த வாக்குரிமைச் சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்காக நாம் அதிக விலை கொடுத்து இருக்கிறோம். பலரது உயிர்த் தியாகங்களால் போராடிப் பெற்ற அந்த வாக்குரிமையை அண்மைக்காலமாக தமிழகத்தில் காசு, பணம், பரிசுப் பொருட்கள் என ஆசை வார்த்தைகள் காட்டி அபகரிக்கும் ஆபத்தான போக்குகள் அதிகரித்துவிட்டன.

மக்களிடம் கொள்கை-கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி வாக்குகளைப் பெற்று மக்களுக்கு பணியாற்றும் இடத்திற்கு வர முடியும் என்ற நிலைகளைகளை எல்லாம் அடியோடு அழித்தொழித்து கோடி கோடியாகப் பணத்தை வாரி இரைக்கக்கூடியவர்களே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சூழலும், வாக்காளர்களுக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் கொடுத்து அவர்களை ஊழல் படுத்தி, அவர்களது மனங்களை மாற்றி வாக்குகளை பெறும் அவல நிலையும் உருவாகியிருக்கிறது.

இடைத்தேர்தல்களில் ஒளிந்தும் மறைந்தும் மூலைமுடுக்குகளில் வாக்குக்கு பணம் கொடுக்க தொடங்கிய அத்தொற்று இப்பொழுது நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும் தொற்றாகப் பரவி இருக்கிறது. வாக்காளர்களே விரும்பாவிட்டாலும் அவர்களுடைய கைகளிலும், பைகளிலும் வலிந்து காசுபணங்களை, பரிசுப் பொருட்களைத் திணித்து அவர்களுடைய மனங்களை மாற்றியதால், இப்பொழுது வாக்காளர்களே வாக்களிக்க அரசியல் கட்சிகளிடம் பணம் கேட்டு பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் என்றால் ரூபாய் 50 முதல் 100 கோடி, சட்டமன்ற தேர்தல் என்றால் ரூபாய் 25 முதல் 50 கோடி, உள்ளாட்சித் தேர்தல் என்றால் ரூபாய் 5 முதல் 10 கோடி என செலவழிக்க வாய்ப்புள்ள புதிய நிலப்பிரபுக்கள், நிலச்சுவாந்தார்கள், அரசியலால் முதலாளிகள் ஆனவர்கள் மட்டுமே தேர்தல்களில் போட்டியிட முடியும்; வெற்றி பெற முடியும் என்ற நிலைகள் உருவாகி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டுக்கு ரூபாய் 2 கோடி முதல் 10 கோடி வரையிலும் பணம், ஹாட் பாக்ஸ்கள், கொலுசுகள், டோக்கன்கள் என இன்னும் வேறு பல விதங்களிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையங்கள் எப்படியாவது அந்த குறிப்பிட்ட தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று கருதுகிறார்களே தவிர, தேர்தல்கள் ஜனநாயக ரீதியாகவும், நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும் என்று நினைப்பதே இல்லை. இதைவிட ஜனநாயகத்திற்கு கேடானது, தீங்கானது வேறெதுவும் இருக்க முடியாது.

எனவே, இனி எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் ஆணையமும் மிக விரிவான திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றம் செல்லவும்; தமிழகம், டெல்லியில் போராட்டம் நடத்தவும்; ’வாக்குகள் விற்பனைக்கு அல்ல’ என்ற கருத்தை இயக்கமாக கொண்டு செல்லவும்; பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க மே மாதம் முதல் தமிழகத்தில் முதற்கட்டமாக 100 பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்படுகிறது.

 

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!