Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 15% கூடுதலாக பெய்துள்ள கோடை மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், கோடை மழை வழக்கத்தை விட 15% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஆச்சரியப்படும் வகையில் 1653% அதிகமாக கோடைமழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை மழை

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது. மேலும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் கோடை காலமாக இருக்கும். இந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இருப்பினும் வெப்பச்சலனம் மற்றும் காற்று திசை வேக மாறுபாடு உள்ளிட்ட சில காரணங்களால் கோடை காலத்தில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழையளவு அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், வழக்கமாக பதிவாகும் 14.5 மி.மீ கோடை மழையின் அளவை விடவும், இந்த ஆண்டு அதிகமாக 16.7 மி.மீ அளவு பெய்துள்ளது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கோடை மழை 1653% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் எப்போதும் வழக்கமாக 3.2 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 56.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் 686% கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வழக்கமாக 5 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 39.3 மி.மீ. கோடை மழை பதிவாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் வழக்கமாக 5.5 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 35.6% கோடை மழை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விடவும் 546% அதிகமாகும். தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், கூடுதலாக கோடை மழை பெய்திருப்பது தண்ணீர்த் தட்டுப்பாட்டை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!