இந்தியா

புனித் ராஜ்குமார் மறைவு எதிரொலி: பெங்களூரில் 144 தடை உத்தவு!

Published

on

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் இன்று மதியம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 11:30 மணிக்கு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் அவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து மருத்துவமனை முன்ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து மதியம் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. மேலும் பெங்களூரில் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பதும், பொது மக்கள் நடமாட்டம் பெங்களூரில் குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார் காலமானதை அடுத்து பெங்களூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் திரையரங்குகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும் பெங்களூர் நகர் முழுவதும் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version