இந்தியா

நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்: அதிரடி அறிவிப்பு

Published

on

ஹிஜாப் விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை காரணத்தைக் கொண்டு உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் இருக்கும் இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுவதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், இந்த தடை உத்தரவு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம் குறித்து போராட்டங்கள் நடக்கும் என செய்திகள் வெளியானதை அடுத்து இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாளை பள்ளி கல்லூரிக்கு வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவார்களா? பிரச்சினையை தீவிரப்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version