இந்தியா

நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் எடுத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் முழு ஊரடங்கும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் இன்னும் அந்த மாநிலத்தில் கட்டுக்குள் வரவில்லை என்பதால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனா அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிராவில் கடும் கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாளை இரவு 8 மணி முதல் இந்த 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை இன்றே வாங்கி வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

144 தடை உத்தரவு அமலுக்கு வந்தால் மூன்று பேருக்கு மேல் பொது இடத்தில் கூடக்கூடாது என்பதும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என்ற கட்டுப்பாடும் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அம்அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version