இந்தியா

ஒரே நாளில் 14 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: இரவுநேர ஊரடங்கு அமலா?

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 14 பேர்களுக்கு அளிக்கிஒமிக்ரான் றான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவிலும் பரவி படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக டெல்லியில் ஐம்பத்தி ஏழு பேர்களுக்கும் மகாராஷ்டிராவில் 54 பேர்களுக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை செய்ய உள்ளார் என்பதும் ஏற்கனவே மாநில அரசு தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 14 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல் தமிழகத்திலும் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 31ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நிறைவு பெறுவதை அடுத்து அதனை அடுத்து இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version