தமிழ்நாடு
தண்ணீர் லாரி மோதி 13 வயது சிறுமி உயிரிழப்பு!
![13 years old - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/13-years-old.jpg)
சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஓமன் மேத்யூ மற்றும் ஜினினா தம்பதியினர் சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு முதல் தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெமீமா அச்சு மேத்யூ என்ற 13 வயது மகள் ஒருவள் இருக்கிறாள். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அச்சு மேத்யூ 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அச்சு மேத்யூ தனது சித்தாப்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை தாமோதரன் தெரு சந்திப்பில் செல்லும் போது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற இருச்சக்கர வாகனத்தில் மோதியது.
இதனால் பின்னால் இருந்த அச்சு மேத்யூ நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் லாரி டயர் சிறுமி அச்சு மேத்யூ மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். லாரி டிரைவர் கோவிந்தராஜ் கவனக்குறைவாக வாகனம் ஓடியதுதான் விபத்துக்கு காரணம் என போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.