இந்தியா

கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் 13 வயது சிறுவன் தற்கொலை: அதிர்ச்சியில் கிராமம்!

Published

on

தெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ஒருவன் கிளாஸ் லீடர் தேர்தலில் தோல்வியடைந்து கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அந்த 13 வயது சிறுவன் படித்து வந்துள்ளான். அந்த சிறுவன் தனது வகுப்பில் லீடருக்கான தேர்தலில் போட்டியிட்டுள்ளான். அதில் தோல்வியடைந்து கிளாஸ் லீடர் ஆகமுடியாததால் மனமுடைந்த சிறுவன் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றுள்ளான்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் அவனை தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள ரயில்வே பாதை அருகே சிறுவன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான். இதன்பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான் சிறுவன் கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் இறந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சிறுவனின் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending

Exit mobile version