தமிழ்நாடு

6-ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்திச் சென்று பலாத்காரம்: இளைஞர்கள் கைது!

Published

on

வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை சிலர் காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கடந்த இரண்டு வருடமாக அதே பகுதியை சேர்ந்த வாடகை ஆட்டோவில் சக மாணவிகளுடன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கமாக ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவியை அதே பகுதியில் உள்ள மற்றொரு ஆட்டோ டிரைவர் அர்ப்பான் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பள்ளிக்கு அருகே காத்திருந்து மாணவியை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

இதனை பார்த்த சிலர் மாணவியின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அவர் ஆம்பூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து, டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் சிறுமியை கடத்தியது யார் என தேடத்தொடங்கினர்.

சிறுமியை அந்த நபர்கள் பெங்களூருக்கு கொண்டு சென்று விடுதி ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை செல்போன் டவர் மூலம் கண்டறிந்த தனிப்படை போலீசா உடனடியாக பெங்களூர் விரைந்து அந்த விடுதியில் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை கடத்திய நான்கு பேரில் மூன்றுபேரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஒருவரையும் தேடி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version