தமிழ்நாடு

தஞ்சையில் மேலும் 13 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தமிழகத்தில் பாதிக்கப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளில் பாதி பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மிக வேகமாக கொரோனா பரவியது. இந்த நிலையில் தற்போது தஞ்சையை சேர்ந்த மேலும் 13 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் 185 பேர் என தகவல் வெளிவந்துள்ளது. அவர்களில் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் 110 பேர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மேலும் 13 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து மேலும் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version