தமிழ்நாடு

தமிழக கோவில்களின் வசதியை மேம்படுத்த 17 பேர் கொண்ட குழு அமைப்பு!

Published

on

தமிழக கோவில்களில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பை செம்மைப்படுத்தவும் பக்தர்களை வசதிகளை மேம்படுத்தவும் இந்த குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அலுவல் சாரா உறுப்பினர்கள் 13 பேர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

2. ஸ்ரீமத் வராக மகாதேசிகன்

3. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள்

4. முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்

5. நீதியரசர் டி.மதிவாணன் (ஓய்வு)

6. திரு சு.கி.சிவம்

7. திரு. கருமுத்து தி.கண்ணன்

8. முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

9. திரு ந. ராமசுப்பிரமணியன்

10. திரு தரணிபதி ராஜ்குமார்

11. மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன்

12. திருமதி ஸ்ரீமதி சிவசங்கர்

13. திருமதி. தேச மங்கையர்க்கரசி

 

 

Trending

Exit mobile version