தமிழ்நாடு

நாளை நடைபெறும் 12ஆம் வகுப்பு தேர்வின் வினாத்தாள் லீக்: அதிர்ச்சியில் மாணவர்கள்!

Published

on

நாளை நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆகி உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே முதல்கட்டமாக நடைபெற்று திருப்புதல் தேர்வில் முந்தைய நாட்களிலேயே வினாத்தாள்கள் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் நாளை இரண்டாம்கட்ட திருப்புதல் தேர்வு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வின் வினாத்தாள்களும் லீக் ஆகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .

நாளை அதாவது ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு கணிதப் பாட தேர்வின் இரண்டு வகையான வினாத்தாள்கள் லீக்காகி உள்ளதாகவும் இரண்டாம் கட்டத் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கு இடமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை கூறியிருந்த நிலையில் மீண்டும் வினாத்தாள் லீக் ஆகியுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்யுள்ளது.

வினாத்தாள் லீக் செய்தவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version