தமிழ்நாடு

மே 2-ல் வாக்கு எண்ணிக்கை, மே 3-ல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குமா?

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் நிலையில் மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி மே மூன்றாம் தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வு துறை தகவல் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் பங்கு பெரிய அளவில் இல்லை என்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களிலும் பிரச்சனை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வு துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் என்பது உறுதியாகி உள்ளது.

Trending

Exit mobile version