தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பும் பயிலும் மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி வரும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. மே மாதம் 21 ஆம் தேதி கடைசித் தேர்வு முடியும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச் சந்திக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

இப்படியான சூழலில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. சீக்கிரமே 10 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு நடைபெறும் கால அட்டவணை விவரம்:

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version