Connect with us

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள்: பொதுப்பணித்துறை ஏற்பாடு

Published

on

தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை எண்ணிக்கை காலியாகி கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் படுக்கைகளின் எண்ணிக்கை வேகமாக நிரம்பி வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து வெளியான அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில்‌ உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும்‌ கடந்த ஆண்டு 2,912 ஆக்‌சிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌ செய்யப்பட்டது. இத்துடன்‌ கூடுதலாக இவ்வாண்டு 2,895 ஆக்சிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது.

சென்னையைப்‌ பொறுத்தவரை கூடுதல்‌ ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌, ராஜீவ்‌ காந்தி அரசு பொது மருத்துவமனையில்‌ 550, அரசு ஸ்டான்லி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ 500, அரசு பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மருத்துவமனை எழும்பூரில்‌ 225, கிங்ஸ்‌ இன்ஸ்டிடியூட்‌ கிண்டியில்‌ 200 மற்றும்‌ சென்னையில்‌ உள்ள இதர சுற்றுவட்டார 11 மருத்துவமனைகளில்‌ 1420 கூடுதல்‌ ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ கூடுதலாக 434 ஆக்சிஜன்‌ படுக்கை வசதிகளும்‌, திருச்சி மாவட்டத்தில்‌ 585, தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ 583, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ 31, மதுரை மாவட்டத்தில்‌ 225 மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ 925 மற்றும்‌ பிற மாவட்டங்களில்‌ கூடுதலாக 7,012 ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகளும்‌ அமைக்கப்பட்டு வருஇறது. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ பொதுப்பணித்‌ துறை பொறியாளர்கள்‌ ஆகியோர்‌ நாள்தோறும்‌ கலந்து ஆலோசித்து இரண்டாம் ‌அலையை எதிர்கொள்ள மருத்துவத்துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும்‌ பொதுப்பணித்துறை தீவிரமாகவும்‌ துரிதமாகவும்‌ செய்து வருகிறது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!