தமிழ்நாடு

வீட்டிலிருந்தே உதவி பெறலாம்.. எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது அறிவிக்கப்பட்ட 1100 சேவை எண் திட்டம், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

1100 உதவி எண் மூலம், தமிழக அரசின் அனைத்துத் துறைகள் தொடர்பான உதவிகளையும் மக்களால் பெற முடியும்.

இந்த உதவி எண்ணை மக்கள் தொடர்புகொள்ளும் போது, உடனடியாக சம்மந்தப்பட்ட துறையினர் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

1100 உதவி எண் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், முதல்வர், மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்புகொண்டு மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த எண்ணைத் தொடர்புகொண்டால் தேவையான உதவிகள் உடனடியாக கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version