தமிழ்நாடு

அசானி புயல் எதிரொலி: 11 மாவட்டங்களில் இடியுடன் மழை எச்சரிக்கை!

Published

on

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நேற்று கூறியபோது டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ,கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மே 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை வட தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version