தமிழ்நாடு
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு: மாணவர்கள் மத்தியில் பரபரப்பு
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது என்பதும், இந்த பொதுத் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் முடிவடைந்து விட்டதாகவும் நாளை மறுநாள் பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தற்போது விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்கள் பாடவாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணி நாளைக்குள் முடிந்து விடும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதனை அடுத்து ஒரு சில நாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.