தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய அக்கா கணவர்!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு அருகே இந்திரா காலனியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை அவரது அக்காவின் கணவர் ஐயப்பன் என்பவர் ஒருதலைக் காதலுக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை தன்னுடன் சகஜமாக பழகும் தனது அக்கா கணவர் ஐயப்பனிடம் கூறியுள்ளார் அந்த மாணவி. இதனையடுத்து ஐயப்பன் காதலுக்கு உதவுவதுபோல நடித்து அந்த மாணவியிடம் நெருக்கமாக பழகியுள்ளான். இதனையடுத்து ஒருநாள் காதலன் அழைத்ததாக கூறி மாணவியை தனிமையான ஒரு இடத்துக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான் ஐயப்பன்.

இதனையடுத்து கடந்த 6 மாதங்களாக அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளான் ஐயப்பன். இதில் அந்த மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவர, மாணவியை அழைத்துக்கொண்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஐயப்பன். காதலனால் கர்ப்பம் அடைந்து விட்டதாக கூறி கருக்கலைப்பு செய்ய கூறியுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வருவதை அறிந்த ஐயப்பன் அந்த மாணவியை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான். பின்னர் மாணவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனையடுத்து ஐயப்பனை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version