இந்தியா

கொரோனாவில் இருந்து குணமாகிய 105 வயது கணவர் மற்றும் 95 வயது மனைவி!

Published

on

கொரோனாவில் பாதிக்கப்பட்ட இளவயது நபர்களே பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் 105 வயது கணவர் ஒருவரும் அவருடைய 95 வயது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய தகவல் தற்போது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 110 வயது நபர் ஒருவரும், அவருடைய 95 வயது மனைவியும் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக வயதில் கொரோனா வைரஸால்ல் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இவராகத்தான் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இருவரும் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது. 105 வயதில் உள்ள நபரும் அவருடைய 95 வயது மனைவியும் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளது அடுத்து இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version