கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து தொடர்: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு!

Published

on

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்றைய இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி அடுத்ததாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பையில் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 100% ரசிகர்களுக்கு மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வழங்க உள்ளது. மும்பை வாங்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் வான்கடே மைதானம் முழுவதும் இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என மகாராஷ்டிர அரசும் அனுமதி அளித்துள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்ற போட்டிகளுக்கு 100% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ளமுடியும்.

நவம்பர் 17ஆம் தேதி முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது என்பதும், நவம்பர் 19ஆம் தேதி 2வது டி20 போட்டி ராஞ்சியிலும், நவம்பர் 21ஆம் தேதி 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அதே போல் நவம்பர் 25 ஆம் தேதி கான்பூரில் முதல் டெஸ்ட் மற்றும் டிசம்பர் 3ஆம் தேதி மும்பையில் இரண்டாவது டெஸ்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version