இந்தியா

பெண் பல் மருத்துவரை கடத்திய 100 ஆண்கள்: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

Published

on

தெலங்கானா மாநிலத்தில் பெண் பல் மருத்துவரை 100 பேர்கள் சேர்ந்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த கடத்தலை வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பல் மருத்துவர் வைசாலி என்பவரை அவரது வீட்டிற்கு எதிரே உள்ள கடை வைத்துள்ள ஒருவர் காதலித்ததாகவும் ஆனால் பல் மருத்துவர் அந்த காதலை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த கடைக்காரர் தனது கடையில் வேலை செய்யும் வேலையாட்கள் உள்பட நூறு பேருடன் ஆரவாரமாக வைஷாலியின் வீட்டிற்குள் புகுந்து அவரை கடத்தியதாக தெரிகிறது.

மேலும் வைஷாலியின் பெற்றோர்களை சரமாரியாக அடித்ததாகவும் அவரது வீட்டின் முன் நின்றிருந்த காரை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் பெண் மருத்துவர் வைஷாலியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு மணி நேரம் கழித்து வைஷாலி மீட்கப்பட்டதாகவும் இந்த கடத்தலில் முக்கிய நபராக அறியப்படும் நவீன் ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவீன ரெட்டி வைஷாலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் ஆனால் வைஷாலி அதற்கு மறுக்கவே கும்பலை திரட்டி கடத்தியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version