தமிழ்நாடு

10 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜன.,31 வரை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சற்றுமுன் அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசு 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை என அறிவித்துள்ளது.

ல்ப்ர்ப்ப்மா வைரஸ் பாதிப்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவி வருவதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்த உடன் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் சற்று முன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் நந்தகோபால் அவர்கள் ஜனவரி 19ஆம் தேதி முதல் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவித்திருந்தார்

ஆனால் சற்று முன்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் 19ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version