தமிழ்நாடு

ஒரு யூனிட் ஆற்று மணல் ரூ.1000 மட்டுமே.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் ஆற்று மணல் 1000 ரூபாய் என அடிப்படை விலையை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மணல் குவாரிகளை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு இருந்த நிலையில், மக்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாகத் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் குறைந்தபட்ச விலை 1000 ரூபாய் 1 யூனிட் மணல் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை தமிழ்நாடு மக்கள் ஆன்லைன் மூலம் மணலை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்து இருந்தார்.

அமைச்சர் துரை முருகன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள் புதிதாக வீடு கட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் பிற கட்டிடப் பணிகளைச் சிரமம் இன்றி மேற்கொள்வதற்கு மணலை எளிமையாகப் பொதுமக்கள் பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தர்.

அதைச் செயல்படுத்தும் வகையில் பொதுமக்கள் இணைய வழியில் மணலுக்கான பணத்தைச் செலுத்தி சிரமமின்றி மணலை எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் பிறபகல் 2 மணி வரையில் பொது மக்கள் பதிவு செய்ததற்கான மணல் விநியோகம் செய்யப்படும். மீதம் உள்ள மணலை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் இருப்பை பொருத்து வழங்கப்படும்” என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆற்று மணலை ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

tnsand.in என்ற இணையதளம் அல்லது TNsand என்ற செயலி மூலம் ஆன்லைனில் மணல் ஆர்டர் செய்யலாம். பணத்தையும் ஆன்லைன் மூலமே செலுத்தலாம்.

Trending

Exit mobile version