Connect with us

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் தரப்படும்: திருநெல்வேலி மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

Published

on

இன்றைய தொழில்நுட்ப உலகில், பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனை மறுசுழற்சி செய்தால், ஓரளவு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றாலும், மறுசுழற்சிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. அப்படி பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஒரு சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அது தான், பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.1 வழங்கும் திட்டம். இத்திட்டத்தின் மூலம், பிளாஸ்டிக் குப்பைகளை குறைத்து மறுசுழற்சி முறையை அதிகரிக்க முடியும் எனவும், சுற்றுச்சூழலப் பாதுகாக்க முடியும் எனவும் இத்திட்டம் கூறுகிறது.

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய்

காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்தால் 1 ரூபாய் தரப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், நெகிழி இல்லா மாநகரத்தை உருவாக்கவும் காலியான பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சோதனை முயற்சி

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் வழங்கும் திட்டத்தின் சோதனை முயற்சியாக, தச்சநல்லூர் மண்டலத்தில் காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிலரும் இத்திட்டத்தின் படி, பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் வாங்கிக் கொள்கின்றனர்.

மறுசுழற்சி

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணம் கொண்ட பொதுமக்கள், இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்து தரலாம். இவ்வாறு பெறப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.

இதனால், சுற்றுச்சூழலை நம்மால் காக்க முடியும். இனிவரும் நாட்களில் இத்திட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்குமானால், வெகு விரைவாகவே திருநெல்வேலியை நெகிழி இல்லா மாநகராட்சியாக மாற்ற முடியும்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!