வைரல் செய்திகள்
20 குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்… பெட்ரோல் பங்க் அசத்தல் அறிவிப்பு!
20 திருக்குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் பங்க் ஒன்று அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று 20 திருக்குறள்களை சேர்ந்தாற் போல் ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து குழந்தைகளுடன் திருக்குறல் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு பெற்றோர்கள் இலவச பெட்ரோல் வாங்கிச் செல்கிறார்களாம். 20 குறள்களைத் தாண்டியும் குறள்களை ஒப்புவித்து மாணவர்கள் ஆச்சர்யப்படுத்துவதாக அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறுகிறார்.
மேலும் கரூரில் உள்ள அந்த தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் தமிழ் பேசும் ஆர்வம் குறைந்து வருகிறது. தமிழ் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கவே இந்தத் திருக்குறள் போட்டியை அறிவித்தோம். இலவச பெட்ரோல் என்பதையும் தாண்டி மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றார்.