Connect with us

உலகம்

கர்ப்பமாக இருந்ததால் வேலையில் இருந்து நீக்கம்.. இழப்பீடு மட்டும் இத்தனை லட்சமா?

Published

on

ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததால் வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் ஆனால் அதே நேரத்தில் பெண்கள் கர்ப்பம் ஆனால் அந்த பெண்ணை எப்படியாவது வேலையை விட்டு நீக்குவதில் தான் நிறுவனம் குறியாய் இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

பெண்கள் கர்ப்பம் ஆனால் அவர்களுக்கு மகப்பேறு விடுமுறை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமன்றி கர்ப்பமான பிறகு அவர்களிடமிருந்து தேவையான வேலையை வாங்க முடியாது என்பதே பெரும்பாலான நிறுவனங்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்ததால் வேலையை விட்டு நீக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள என்ற எஸ்ஸெக்ஸ் நகரில் ஐடி நிறுவனத்தில் 34 வயது சார்லோஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. மூன்று முறை அவருக்கு கரு கலைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் தனது மேனேஜரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டார். ஆனால் மேனேஜர் நீங்கள் வேலைக்கு சேர்ந்து ஒரு சில மாதங்கள்தான் ஆகிறது என்பதால் மகப்பேறு விடுமுறை உங்களுக்கு பொருந்தாது என்றும் கூறியதோடு அவரை டிஸ்மிஸ் செய்தார்.

இந்த நிலையில் மகப்பேறு விடுமுறை தனக்கு அளிக்காததால் கடும் மன உளைச்சலில் இருந்த சார்லோஸ்-க்கு திடீரென மீண்டும் ஒருமுறை கரு கலைந்துவிட்டது. இதனை அடுத்து தன்னை பணி நீக்கம் செய்த நிறுவனத்திற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே 3 முறை கரு கலைந்து இருந்த தனக்கு நான்காவது முறையாக கருகலைய தனது நிறுவனம் தான் காரணம் என்று தொடர்ந்த வழக்கு ஒரு வருடமாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியான நிலையில் கர்ப்பமடைந்த ஒரே காரணத்திற்காக ஒரு பெண் வேலை நீக்கம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிமன்றம் அவருக்கு ரூபாய் 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தும், அந்நிறுவனம் மேல்முறையீடு செய்யாமல் 15 லட்சம் இழப்பீட்டை அந்த பெண்ணுக்கு வழங்கி இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!