உலகம்

ரபேல் ஊழலில் மோடிக்கு தொடர்பு உள்ளது.. லோக் சபாவில் ராகுல் குற்றச்சாட்டு!

Published

on

டெல்லி: பிரதமர் மோடிக்கு கண்டிப்பாக ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளது என்று லோக் சபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமனுக்கு ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளதா என்று எனக்கு தெரியாது. ஆனால் பிரதமர் மோடிக்கு கண்டிப்பாக ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளது. ரபேல் விவகாரத்தில் மோடி மீதுதான் குற்றம்சாட்டுகிறேன்; மனோகர் பாரிகர் மீது அல்ல.

ரபேல் ஒப்பந்தத்தில் நேரடியாக பிரதமர் மோடிக்குத்தான் தொடர்பு என குற்றம்சாட்டுகிறேன்.என்னுடைய கேள்வி எல்லாம் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி எப்படி வந்தார் என்பதுதான்.

அனில் அம்பானியை உள்ளே கொண்டு வரும் அளவிற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும். இதற்கு காரணம் மோடிதான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version