இந்தியா
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
முழு லாக்டவுன் பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது சனி ஞாயிறு மட்டும் முழு லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர லாக்டவுன் மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் அனைத்து நாட்களிலும் முழு லாக்டவுன் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வருவதை அடுத்து அச்சமடைந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
Migrants are out from Maharastra because of lockdow rumour