கிரிக்கெட்

முக்கியக் கிரிக்கெட் வீரர்களுக்குக் கொரோனா… சூசகமாக வாய்ப்புக் கேட்ட தினேஷ் கார்த்திக்!

Published

on

இந்தியக் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் இளம் வீரர் ரிஷப் பந்த்-க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அணியில் கூடுதலாக இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மட்டுமல்லாது விருத்திமான் சஹாவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் ராகுல் விக்கெட் கீப்பர் ஆக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தமிழகத்தைச் சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது போல் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். ‘சும்மா சொல்றேன்’ என தயாராகும் இருக்கும் கிரிக்கெட் கிட்டை புகைப்படம் எடுத்துப் பதிவிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கிரிக்கெட் வர்ணனைக்காக தினேஷ் கார்த்திக்கும் இங்கிலாந்தில் தான் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Trending

Exit mobile version