சினிமா செய்திகள்

பேய்ப்பட இயக்குநர் உடன் ஹீரோ ஆக இணைந்த சுந்தர் சி… நாயகி ஆன சீரியல் நடிகை!

Published

on

புதிதாக உருவாக உள்ள பேய்ப் படம் ஒன்றில் நாயகன் ஆக நடிக்க இயக்குநர் சுந்தர் சி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான ‘கட்டப்பாவ காணோம்’ என்னும் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் மணி செயோன். இவர் தற்போது தனது இரண்டாவது படத்தையும் பேய்ப் படமாகவே எடுக்க உள்ளார். இந்தப் படத்தில் தான் சுந்தர் சி நாயகன் ஆக நடிக்கிறார்.

சுந்தர் சி வழக்கமாக பேய்ப் படம் இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால், கடைசியாக இருட்டு என்னும் பேய்ப் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஓட வில்லை. இந்நிலையில் அடுத்த பேய்ப் படத்துக்கும் தயாராகி உள்ளார். ஏதுவாக அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்துள்ளது.

இந்தப் படத்தில் நாயகி ஆக ஜீ தமிழ் சீரியல் நடிகை சாந்தினி நாயகி ஆக நடிக்க உள்ளார். வெறும் பேய்ப் படம் ஆக மட்டும் இல்லாமல் க்ரைம் த்ரில்லர் படம் ஆகவும் இந்தப் படம் உருவாக உள்ளதாம்.

Trending

Exit mobile version